ஆப்நகரம்

சென்னையில் மீன் விலை பல மடங்கு அதிகரிப்பு

மின்பிடி தடைகாலம் காரணமாக சென்னையில் மீன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

TNN 15 Apr 2017, 5:53 pm
சென்னை : மின்பிடி தடைகாலம் காரணமாக சென்னையில் மீன் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
Samayam Tamil fish price hike in chennai
சென்னையில் மீன் விலை பல மடங்கு அதிகரிப்பு


தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கடல் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த நாட்களில் மீன்கள் ஆழ்கடலில் முட்டையிட்டு, குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும். அதனால் அப்போது மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. சரியாக 45 நாட்கள் கடைபிடிக்கப்படும் மீன் பிடித் தடைக்காலத்தில் விசைப் படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கரைகளிலேயே நிறுத்தப்படும்.

மீன் பிடி தடை காலம் அமலுக்கு வந்துள்ளதால் சென்னையில் மீன் வரத்து குறைந்தது. இதனால் மீன் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளன. இன்று ஒரே நாளில் மீன் விலை பல மடங்குகள் அதிகரித்துள்ளது.

சென்னையில் வஞ்சிர மீன் இதுவரை 1 கிலோ ரூ.600-க்கு விற்கப்பட்டு வந்தது. அது இன்று கிலோ ரூ.950 ஆக அதிகரித்தது. ஒரு கிலோ ரூ.400-க்கு விற்கப்பட்டு வந்த வவ்வால் மீன் ரூ.700 ஆக உயர்ந்துள்ளது.

கிலோ ரூ.250-க்கு விற்கப்பட்ட பெரிய சங்கரா மீன் ரூ.350 ஆகவும், ரூ.350-க்கு விற்கப்பட்ட கடம்பா மீன் ரூ.500 ஆகவும், ரூ..450-க்கு விற்கப்பட்ட பெரிய இறால் ரூ.650 ஆகவும், ரூ.300-க்கு விற்கப்பட்ட சிறு இறால் ரூ.550 ஆகவும் விலை உயர்ந்தது.

fish price hike in chennai

அடுத்த செய்தி