ஆப்நகரம்

போலீஸ் துரத்தியதால் கடலில் விழுந்த மீனவர் மரணம்

சென்னை காசிமேட்டில் போலீசார் துரத்தியதால், கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்த வாலிபர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 10 Feb 2018, 3:56 pm
சென்னை காசிமேட்டில் போலீசார் துரத்தியதால், கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்த வாலிபர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil fisherman dies after police raid in chennai kasimedu
போலீஸ் துரத்தியதால் கடலில் விழுந்த மீனவர் மரணம்


சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு சில மீனவர்கள் படகில் இருந்தனர். அப்பேது அங்கு ரோந்து வந்த போலீசார், இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று எண்ணி விசாரணை நடத்தினர்.

அப்போது, சில மீனவர்களை போலீஸ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இடத்தில் இருந்து வெளியேறும்படி விரட்டியடித்துள்ளனர்.

போலீசாருக்கு பயந்து மீனவர் ஒருவர் அங்கிருந்து நகரும் போது, கால் தடுக்கி கடலில் விழுந்துள்ளார். தொடர்ந்து அங்கு வரவழைக்கப்பட்ட தீயணைப்புப் படையினர், தேடியதில், மீனவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி