ஆப்நகரம்

இலவசமா கொடுக்கச் சொன்னா, குடிநீரை காசுக்கு விற்ற டேங்கர் லாரிகள் - கடும் அபராதம்!

மெட்ரோ வாட்டர் நீரை காசுக்கு விற்ற டேங்கர் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

TIMESOFINDIA.COM 13 May 2019, 6:03 pm
சென்னை மெட்ரோ வாட்டருடன் ஒப்பந்தம் செய்து கொண்ட தனியார் டேங்கர் டிரக்குகள், பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீரை விநியோகம் செய்து வருகின்றன. இந்நிலையில் 5 டேங்கர் டிரக்குகள் குடிநீரை காசுக்கு விற்றது தெரியவந்துள்ளது.
Samayam Tamil Chennai Metro Water


அதாவது அடையாறு, திரு.வி.க நகர், அண்ணா நகர், ராயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் அபார்ட்மெண்ட்களுக்கு கடந்த 3 நாட்களாக விற்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட லாரிகளுக்கு தலா ரூ.50,000 அபராதம் விதித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு, அண்ணா நகரில் உள்ள நீர் நிரப்பும் மையத்தில் டேங்கர் ஒன்று நீர் நிரப்பிச் சென்றது. இது வில்லிவாக்கம் பகுதியில் பொதுமக்களுக்கு இலவசமாக குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

அதற்குப் பதிலாக புரசைவாக்கத்தில் உள்ள அப்பார்ட்மெண்ட்டில் தண்ணீரை விற்றுள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. உடனே டேங்கரை பிடித்தனர்.

கடந்த வியாழன் அன்று, அடையாறு பகுதியிலும், திரு.வி.நகரிலும் டேங்கர் லாரிகள் மோசடியில் ஈடுபட்ட போது பிடிபட்டன. இதுகுறித்து பேசிய மெட்ரோ வாட்டர் நிர்வாக பொறியாளர் விஜி ராமசாமி, முதல் முறை தவறு செய்தால் அபராதம்.

இரண்டாவது முறை தவறு செய்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். அவர்களின் செக்யூரிட்டி தொகையும் திரும்ப அளிக்கப்படாது என்று கூறினார். குடிநீர் விநியோகம் செய்யும் லாரிகளில் ஜிபிஎஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அவற்றை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

அடுத்த செய்தி