ஆப்நகரம்

அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் திருட்டு: 5 பெண்கள் கைது

அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிய 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

TNN 24 Mar 2017, 7:58 pm
அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிய 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
Samayam Tamil five women held for stealing drills worth rs 2 lakh from chennai firm
அம்பத்தூரில் தனியார் நிறுவனத்தில் திருட்டு: 5 பெண்கள் கைது


அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் நேற்றிரவு பெண்கள் சிலர் இரும்புக் கதவுகளை ரம்பம் போட்டு அறுத்து, உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த இரும்புக் கதவுகள், ஜன்னல்கள், கிரில் கேட் போன்றவற்றை அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

காலையில் அலுவலகம் வந்த மேலாளர் ஆறுமுகம் இதைப் பற்றி போலீசில் புகார் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார், சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில், இந்த வித்தியாசமான திருட்டை நிகழ்த்திய, 5 பெண்களையும் அடையாளம் கண்டுபிடித்தனர். ஓட்டேரியை சேர்ந்த ஃபாத்திமா, குப்பம்மாள், சாமூண்டிஸ்வரி, மலர், மஞ்சுளா ஆகியோர் என தெரியவரவே, அவர்களை உடனடியாகக் கைது செய்தனர்.

மேலும், அந்த பெண்கள் திருடிச் சென்ற, இரும்புக் கதவுகள், ஜன்னல்கள், கிரில் கேட்டுகள் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Five women have been arrested for allegedly stealing drills worth Rs 2 lakh from a private firm in Ambattur Industrial Estate in Chennai.

அடுத்த செய்தி