ஆப்நகரம்

பைக் திருட்டு... ஐந்து பேர் கொண்ட டீன் கைது!

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து எட்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 28 Dec 2020, 10:11 am
சென்னை துரைப்பாக்கம், காரப்பாக்கம், கண்ணகி நகர் சுற்றுவட்டார பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக கண்ணகி நகர் காவல் நிலையத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
Samayam Tamil பைக் திருட்டு - ஐந்து பேர் கைது
பைக் திருட்டு - ஐந்து பேர் கைது - தென் சென்னை


அடையாறு காவல் துணை ஆணையர் விக்ரமன் உத்தரவின்பேரில் கண்ணகி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இருசக்கர வாகனம் திருடு போன பகுதிகளிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சியை ஆய்வு செய்தபோது, கண்ணகி நகரை சேர்ந்த அஜய்(19), சூர்யா(20), பிரித்திவிராஜ்(19), சேவியர்( 23), பிரதீப்ராஜ்(19) ஆகிய ஐந்து பேர்தான் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.

பஸ் ஸ்டாப்பில் கோக்கைன் விற்ற நைஜீரிய வாலிபர் கைது!

அத்துடன் இவர்கள் மயிலாப்பூர், கோட்டூர்புரம், செம்மஞ்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் தங்களின் கைவரிசையை காட்டி வந்ததும் தெரிந்தது.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போவீசார், அவர்களிடமிருந்து 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர். ஐந்து பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி