ஆப்நகரம்

சென்னையில் ரூ.1.34 கோடி மதிப்பில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!

விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Samayam Tamil 18 Mar 2018, 4:11 pm
சென்னை: விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Samayam Tamil foreign currencies seized from chennai airport
சென்னையில் ரூ.1.34 கோடி மதிப்பில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!


சென்னையில் இருந்து துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக தீவிர சோதனை நடத்தப்பட்டது.

அதில் சென்னையைச் சேர்ந்த சையத் துராபுதீன்(26) என்பவரின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.

அதில் சவுதி அரேபியாவின் ரியால், குவைத்தின் தினார், ஐக்கிய அரபு எமீரேட்சின் திர்மிஹ்காம், ஓமனின் ரியால், கத்தாரின் ரியால், மற்றும் பஹ்ரைனின் தினார் நாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.1.34 கோடி என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சையத்தை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக மத்திய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்ட அறிக்கையின் மூலம், பறிமுதல் சம்பவம் தெரியவந்துள்ளது.

Foreign currencies seized from Chennai Airport.

அடுத்த செய்தி