ஆப்நகரம்

வர்தா புயலில் சாவி தொலைந்து, 4 மாதம் கழித்து கார் திருட்டு!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 12-ல் ஏற்பட்ட வர்தா புயலின் கோர தாண்டவத்தில் கார் சாவியை தொலைத்த நபர், மாற்று சாவியை போட்டு பயன்படுத்தி வந்த நிலையில், கார் திருட்டுபோன சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

TNN 26 Apr 2017, 1:13 pm
சென்னை: தமிழகத்தில் கடந்த டிசம்பர் 12-ல் ஏற்பட்ட வர்தா புயலின் கோர தாண்டவத்தில் கார் சாவியை தொலைத்த நபர், மாற்று சாவியை போட்டு பயன்படுத்தி வந்த நிலையில், கார் திருட்டுபோன சம்பவம் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Samayam Tamil four months after losing car key in cyclone chaos family loses then regains vehicle
வர்தா புயலில் சாவி தொலைந்து, 4 மாதம் கழித்து கார் திருட்டு!


வர்தா புயலின்போது, விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கரண் என்பவரது காரின் சாவி தொலைந்துபோனது. இதைத்ஹ் தொடர்ந்து கள்ளச் சாவியை பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த மார்ச் 15ஆம் தேதி சற்றும் எதிர்பாராத விதமாக, பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திருட்டுபோனதாக காவல்துறை விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

விருகம்பாக்கம் காவல்துறை நடத்திய விசாரணையில் பபுயலில் தொலைந்த சாவி மற்றும் திருட்டுப்போன காரையும் மீட்டு தந்துள்ளனர். இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் ஏரியாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி வீடியோ காட்சியின் உதவியுடன் இவர்களை கைது செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி வீடியோ பதிவில், இரண்டு பேர் சாதாரணமாக நடந்து வந்து காரை ஒட்டிச் சென்றது பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. முகமது ஆசான்(35), பால்ராஜ்(27) ஆகியோர் திருடிச் சென்ற கார் புதுச்சேரி அருகில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொழில் நஷ்டமடைந்து மிகவும் கவலையில் இருந்து முகமது, வர்தா புயலின்போது விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பின் அருகே சாலையோரமாக கிடந்த கார் சாவியை எடுத்து வைத்துள்ளார். பின்னர், அந்த காரை நோட்டமிட்டு திருடிச் சென்று போலி ஆவணங்களுடன் விற்க திட்டமிட்டிருந்ததாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனினும்,போலி ஆவணங்களை தயார் செய்ய கால அவகாசம் தேவைப்பட்டதால், முகமது வேண்டியபோது காரை தனது சொந்த பயன்பாட்டுக்கு வைத்திருந்ததாகவும், அந்த சூழலில் காரை திருடும்போது மாட்டிக் கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Three months after they lost their car key in the chaos of Cyclone Vardah pounding the city on December 12, members of a family in a Virugambakkam apartment complex also lost the vehicle to unidentified thieves.

அடுத்த செய்தி