ஆப்நகரம்

செல்வம் பெருகச் செய்யும் கனகதாரா தியானப் பயிற்சி

சென்னையில் இலவச சமயாச்சார ஸ்ரீ வித்யா தியான பயிற்சி உட்பட தியானம் வழியே செல்வம் பெருகச் செய்யும் 2 நாள் கனகதாரா நிகழ்ச்சி நடக்கிறது.

Samayam Tamil 17 Sep 2018, 8:25 pm
சென்னை: சென்னையில் இலவச சமயாச்சார ஸ்ரீ வித்யா தியான பயிற்சி உட்பட தியானம் வழியே செல்வம் பெருகச் செய்யும் 2 நாள் கனகதாரா நிகழ்ச்சி நடக்கிறது.
Samayam Tamil thiyanam


இதுகுறித்து ரிஷி விஞ்ஞான் உயர் கல்வி மையத்தின் நிர்வாகி ஜனனி கூறியுள்ளதாவது:

கோவை பெரிய தடாகம், ஸ்ரீ லலிதாம்பிகை ஆசிரமத்தில் அமைந்துள்ள ரிஷி விஞ்ஞான் உயர் கல்வி மையம், உயர் நிலை ஆன்மீக வகுப்புகளையும், தியான பயிற்சிகளையும் நடத்தி வருகிறது.

இந்த அமைப்பு சார்பில், சமயாச்சார ஸ்ரீ வித்யா பயிற்சிகள் அளித்து வரும், ஆன்மீக குரு பூஜ்ய ஸ்வாமிஜி ஸ்ரீ ஜகதாத்மானந்த சரஸ்வதி அவர்களால், ‘கனகதாரா’ தியான பயிற்சி, செப். 22 மற்றும் 23 ஆம் தேதிகளில், சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்படம் அருகில், ஸ்ரீ பாபா கல்யாண மண்டபத்தில் நடத்துகிறது.

மனித உடலில் 7 சக்தி சக்ரங்கள் அமைந்துள்ளன. அவற்றின் பலம், பலவீனத்தை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘பயோ வெல்’ கருவி மூலம் அறிந்து கொள்வது. ஸ்ரீ வித்யா தியான முறையில், ஒருவரின் பலவீனமான சக்ரங்களை சக்தி பெறச் செய்ய பயிற்சி அளிப்பது. இப்படி உடல் நலம், செல்வ வளம் பெற வைப்பதே கனகதாரா தியான நிகழ்ச்சியின் நோக்கம்.

ஆதிசங்கரர் பிட்க்ஷை கேட்டு ஒரு வயதான பெண்மணி வீட்டுக்கு சென்றார். அங்கே அவருக்கு கிடைத்தது வாடி வதங்கிய ஒரு நெல்லிக்கனி. இல்லை என்று சொல்லாமல் தனக்கு தானம் அருளிய அந்த பெண்மணியின் வறுமை நிலை நீங்கி, செல்வ வளம் பெருக, அன்னையை வேண்டி ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ அருளினார். அப்போது தோன்றிய அன்னை, தங்க நெல்லிக்கனிகளை மழையாக பொழிந்தாள். மனமுருக கனகதாரா படித்தால், நம் இல்லத்திலும் செல்வம் பொழியும்.

அதுபோல, நம் உடல் சக்கரங்களை, தியானத்தின் மூலம் சக்தி பெறச் செய்து, நமது இல்லத்தில் செல்வம் பெருக செய்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

இந்த 2 நாள் நிகழ்ச்சிகள் 3 விதமாக நடக்கின்றன. செப்.22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கும் சமயாச்சார ஸ்ரீ வித்யா தியான நிகழ்ச்சியில் பங்குபெற அனுமதி இலவசம். அதன்பின் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் உண்டு.

மதியம் உடல் சக்ர மையங்களின் எனர்ஜி அளவு கண்டறிந்து அதன் ரிப்போர்ட் வழங்கப்படுகிறது. பின்னர் தனித்தனியே ஆலோசனைகளை சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி வழங்குகிறார். மறுநாள் பிரத்யேக தியான வகுப்புகள் நடக்கின்றன. மகாமேரு வழிபாடு, பூஜை முறைகள் கற்றுத்தரப்படுகின்றன. அங்கேயே மகாமேரு சிலைகளும் கிடைக்கின்றன.

இலவச நிகழ்ச்சியில் பங்கேற்க, 97895 07070 என்ற எண்ணில் அழைத்து முன்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி