ஆப்நகரம்

மீண்டும் மழை... சென்னையில் தொடரும் கூல் கிளைமேட்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே தொடர் மழை பெய்து வருவதால் மாநகரில் தொடர்ந்து குளிர்ந்த வானிலை நிலவுகிறது.

Samayam Tamil 4 Dec 2020, 9:32 am
புரேவி புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரி்த்திருந்தது.
Samayam Tamil கோப்பு படம்
சென்னை மழை


இதன் காரணமாக, தென்காசி. ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதேசமயம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றுதான் கணிக்கப்பட்டிருந்தது.

மழைக்கு சென்னை சாலைகளின் லட்சணத்தை பாருங்க மக்களே!

ஆனால், இந்த கணிப்பு மாறாக, சென்னை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணி முதலே மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

கிண்டி, சைதாப்பேட்டை, ராயப்பேட்டா, திருவான்மியூர், குரோம்பேட்டை, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருவதால், வழக்கம்போல் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சென்னையில் செம கிளைமேட்... இதான் காரணம்!

இருப்பினும், மழை காரணமாக சென்னை மாநகரில் குளிர்ச்சியான வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி