ஆப்நகரம்

இறைச்சி கடையில் ஆடுகள் திருட்டு... கொள்ளையர்களை தேடும் தாம்பரம் போலீஸ்!

மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள பிரபல மட்டன் கடையில் ஆடுகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 23 Jan 2021, 9:37 pm
சென்னை மேற்கு தாம்பரம், முடிச்சூர் சாலை, ஸ்ரீராம் நகரில் முபாரக் மட்டன் ஸ்டால் என்ற பெயரில் இறைச்சி கடை வைத்து நடத்தி வருபவர் காஜா மொய்தீன்(42).
Samayam Tamil மேற்கு தாம்பரத்தில் ஆடுகள் திருடுபோன கடை
சென்னை மேற்கு தாம்பரத்தில் ஆடுகள் திருடுபோன மட்டன் கடை


இவர் வியாபாரத்துக்காக தமது கடையில் ஒரு டஜன் ஆடுகளை நேற்றிரவு கட்டிப் போட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை கடைக்கு வந்தபோது கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 12 ஆடுகள் திருடு போனதை அறிந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

வீரப்பன் பற்றி படமா, முதல்ல என்கிட்ட பெர்மிஷன் வாங்கணும்...

இது குறித்து காஜாமொய்தீன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் ஆடுகளையும், திருடர்களையும் தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி