ஆப்நகரம்

கொரோனா முகக்கவத்தை இவங்க எதுக்கு யூஸ் பண்ணிருக்காங்க பாருங்க!

கொரோனா முகக்கவசத்துக்குள் மிகவும் நூதனமாக வைத்து தங்கம் கடத்தி வந்த விமானப் பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

Samayam Tamil 11 Nov 2020, 10:04 pm
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து மீட்பு விமானங்களில் சென்னைக்கு வருபவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். நேற்றிரவு துபாயில் இருந்து வந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
Samayam Tamil தங்க கடத்தல்
முகக் கவசத்துக்குள் வைத்து தங்கம் கடத்தல்


அப்போது ஆந்திரா, ராமநாதபுரம், புதுக்கோட்டை,திருச்சி மற்றும் சென்னையை சோ்ந்த 11 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்த போது 3 6தங்க பசை உருளைகள், தங்க பசை பாக்கெட்கள், ஒரு செயின், 5 தங்க கட்டிகள் ஆகியவற்றை பயணிகள் உள்ளுறுப்புகள், உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

பெயின்ட்டரை திருடனாக மாற்றிய கொரோனா!

இதில் மற்றொரு குறிப்பிடும் அம்சமாக, பயணிகள் சிலர் தங்களது கொரோனா முகக்கவசத்துக்குள் வைத்து மிகவும் நூதன கடத்தல் தங்கத்தை கொண்டு வந்ததை அறிந்து அதிகாரிகள் வியப்படைந்தனர். முகக்கவசத்தில் மறைத்து கொண்டு வரப்பட்ட 114 கிராம் தங்க பசையை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து இரு வேறு விமானங்களில் சென்னை வந்த பயணிகளில் 16 பேரிடமிருந்து மொத்த ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3.5 கிலோகிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்த்னர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி