ஆப்நகரம்

மதுவால் ஏற்பட்ட விபரீதம் - வியாபாரம் பேசுவதாக அழைத்து 8 லட்ச மதிப்பு தங்கம் திருட்டு

சென்னை: செல்ஃபியால் திருடப்பட்ட 301 கிராம் தங்கம் சில மணி நேரத்தில் போலீஸார் திருடனை கண்டுபிடித்து தங்கத்தை மீட்டு தந்துள்ளனர்.

Samayam Tamil 27 Sep 2018, 2:34 pm
ஹேமந்த் (43) என்ற தங்க நகை கடைகளுக்கு தங்கங்களை அளிக்கும் வியாபாரம் செய்து வருகின்றார்.
Samayam Tamil gold theft


நேற்று இரவு ஹேமந்துக்கு வியாபார வாய்ப்பு அளிப்பதாக கூறி, கருணாகரன் (35) என்பவர் அழைத்துள்ளார். இதையடுத்து சென்னை, வால் டாக்ஸ் சாலையில் உள்ள டாஸ் மாக் கடைக்கு அழைத்துள்ளார். வேண்டாம் என்று கூறியும், வியாபாரம் செய்ய வேண்டுமென்றால் குடிக்க வேண்டும் என கருணாகரன் வற்புறுத்தி குடிக்க வைத்துள்ளார்.

அப்போது, ஹேமந்த் தன் மொபைலில் இருவரும் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என ஒரு செல்பி எடுத்துள்ளார்.

தொடர்ந்து இருவரும் குடித்த நிலையில், கருணாகரன் சிறிது நேரத்தில் வருகிறேன் என கூறி எழுந்து சென்றுள்ளார். போதையில் இருந்த ஹேமந்த தான் வைத்திருந்த கைப் பையில், 8.8 லட்சம் மதிப்பிலான 301 கிராம் தங்கம் இருப்பது பாதுகாப்பதில் கவனக்குறைவாக இருந்ததை சாதகமாக்கி கருணாகரன் அதை திருடிச் சென்றுள்ளார்.

வெகு நேரம் ஆகியும் கருணாகரன் வராததால் சந்தேகமடைந்த ஹேமந்த் தன் கை பையும் காணாமல் போய் உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் போலீஸில் புகார் அளித்தார்.

மேலும் ஹேமந்த் பிடித்த செல்ஃபி புகைப்படத்தை வைத்து கருணாகரனை போலீஸார் சில மணி நேரத்தில் கைது செய்து தங்கத்தை மீட்டனர்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்