ஆப்நகரம்

சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கும் மழை

ஈ.சி.ஆர். சாலை, பெசன்ட் நகர், மெரினா கடற்கரை, ராயப்பேட்டை அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Samayam Tamil 4 Oct 2018, 1:23 am
சென்னையில் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் கனத்த மழை பெய்து வருகிறது.
Samayam Tamil 30THRAINCHENNAI


சென்னையின் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது. கடற்கரைக்கு அருகில் உள்ள ஈ.சி.ஆர். சாலை, பெசன்ட் நகர், மெரினா கடற்கரை, ராயப்பேட்டை அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

அடுத்த செய்தி