ஆப்நகரம்

ஆவணங்களுடன் பறக்கும் லாரிகள்; தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து லாரிகள் மூலம் பொருட்கள் அள்ளி செல்லப்படுகிறது.

Samayam Tamil 4 May 2021, 10:52 am
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து வருகிற 7ம் தேதி புதிய அரசின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார்.
Samayam Tamil தமிழ்நாடு அரசு தலைமை செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமை செயலகம்


முதல்வர் பதவி கேட்கும் பாஜக?; தர்மயுத்தம் முடிவில் ரங்கசாமி!

இதனை தொடர்ந்து பதவியேற்பு விழாவுக்கான பணிகள் ஆளுநர் மாளிகையில் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ஏராளமான லாரிகள் அதிவேகத்தில் வெளியே செல்வதாகவும், அதில் ஆவணங்கள் அதிகளவில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தலைமை செயலக வட்டாரத்தினர் கூறியதாவது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் விரைவில் திமுக அரசு பதவி ஏற்க உள்ளது. இதனால் தமிழக அமைச்சர்கள் பயன்படுத்தி வந்த அறைகளில் இருந்த பொருட்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சொந்தமான பொருள்களை காலி செய்யக்கூடிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்டாலினை வியக்க வைத்த எதிர் வீட்டு வாழ்த்து கடிதம்!

இதற்காக லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இவற்றில் ஆவணங்கள் ஏதாவது எடுத்து செல்லப்படுகிறதா? என்பது பற்றியெல்லாம் எங்களுக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அடுத்த செய்தி