ஆப்நகரம்

‘டெட் பாடி’ எரிக்க டோக்கன் வாங்கனும்; கமிஷனர் தகவலால் கலங்கும் சென்னை!

சென்னையில் உள்ள மாநகராட்சி மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை தகனம், அடக்கம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டு உள்ளதாக, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். இதன் மூலம், கொரோனா நோயாளிகள் அதிகளவில் உயிரிழந்து வருவது தெரிய வந்துள்ளதால் சென்னை மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Samayam Tamil 16 May 2021, 12:06 pm
சென்னையில் உள்ள மாநகராட்சி மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை தகனம், அடக்கம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். இதன் மூலம், கொரோனா நோயாளிகள் அதிகளவில் உயிரிழந்து வருவது தெரிய வந்துள்ளதால் சென்னை மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Samayam Tamil மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி
மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி


சென்னை தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி டாக்டர்கள் மேற்கொண்டுள்ள பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். அப்போது, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தயாநிதிமாறன் எம்.பி உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வுக்கு பிறகு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை முழுவதும் மொத்தம் 140 மின் தகன மேடைகள் உள்ளன. இவற்றில் எந்த தகன மேடையிலும் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதில் தாமதம் ஏற்படக்கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.

கொரோனாவால் பிணவறை ‘ஹவுஸ்புல்’; கொளுத்தும் வெயிலில் கிடக்கும் உடல்கள்!

மாநகராட்சி மயானங்களில் உடல்களை தகனம், அடக்கம் செய்ய கொண்டு செல்லலாமா? அல்லது காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்குமா? என்பது குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் உள்ள மின் தகன மேடைகளில் உடல்களை தகனம், அடக்கம் செய்வதற்கான முன்பதிவு வசதிகளும் தற்போது செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆணையர் கூறினார்.

பட்டைய கிளப்பும் பாமக எம்எல்ஏ; ‘ஆக்சிஜன் ரெடி பண்ணுங்கப்பா’!

ஊரடங்கு அறிவிப்புக்கு பிறகு சென்னையில் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக அரசல் புரசலாக செய்திகள் வந்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையரின் அறிவிப்பின் மூலம் கொரோனா நோயாளிகள் அதிகளவில் உயிரிழந்து வருவது தெரிய வந்துள்ளதால் சென்னை மக்கள் கலக்கமடைந்து உள்ளனர்.

அடுத்த செய்தி