ஆப்நகரம்

அண்ணாசாலை ஏடிஎம்மில் கட்டுக்கட்டாக பணம் செலுத்திய இளைஞர்; ஹவாலா பணம் ரூ.17.8 லட்சம் பறிமுதல்!

சென்னையில் ஹவாலா பணத்தை கட்டுக்கட்டாக ஏடிஎம்மில் செலுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 6 Mar 2019, 4:35 pm
சென்னை அண்ணா சாலையில் திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லைக்குள் இந்தியன் வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று இரவு 8 மணியளவில் வந்த வடமாநில இளைஞர் ஒருவர், பணம் செலுத்திக் கொண்டிருந்தார்.
Samayam Tamil Hawala


அதாவது கட்டுக்கட்டாக இடத்தை விட்டு நகராமல் நீண்ட நேரம் பணம் செலுத்தி உள்ளார். அருகில் உள்ள பையிலும் கட்டுக்கட்டாக பணம் இருந்துள்ளது. இதனை வாடிக்கையாளர் ஒருவர் பார்த்துள்ளார். உடனே அந்த வழியாக வந்த திருவல்லிக்கேணி காவலரிடம் விஷயத்தைக் கூறியுள்ளார்.

அவர்கள் இளைஞரை தனியே அழுத்துச் சென்று, விசாரணை நடத்தினர். அப்போது தட்டுத் தடுமாறி பதிலளித்துள்ளார். அவரிடம் இருந்த பையை சோதித்து பார்க்கையில், அதில் கட்டுக்கட்டாக ரூ.17.8 லட்சம் ரொக்கம் இருந்துள்ளது. பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் பெயர் ரத்தர் சாகிப்(29) என்று தெரியவந்தது. சென்னை மண்ணடியில் உள்ள நைனியப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஆவார். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலாக இருக்கும் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபரி அமலாக்கத்துறையில் போலீசார் ஒப்படைத்தனர்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்