ஆப்நகரம்

ஒருநாள் மழைக்கே தாங்காத மடிப்பாக்கம்; மூழ்கடிக்கும் நீரில் தத்தளிக்கும் பொதுமக்கள்!

தொடர்மழை காரணமாக மடிப்பாக்கம் பகுதி முழுவதும் நீரில் தத்தளித்து வருகிறது.

TNN 31 Oct 2017, 3:41 pm
சென்னை: தொடர்மழை காரணமாக மடிப்பாக்கம் பகுதி முழுவதும் நீரில் தத்தளித்து வருகிறது.
Samayam Tamil heavy rain hits madipakkam area in chennai
ஒருநாள் மழைக்கே தாங்காத மடிப்பாக்கம்; மூழ்கடிக்கும் நீரில் தத்தளிக்கும் பொதுமக்கள்!


தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் சென்னையில் கடந்த 2 நாட்களுக்காக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மழையால் தாம்பரம், பள்ளிக்கரணை, முடிச்சூர், மடிப்பாக்கம், ராம்நகர், சதாசிவம் நகர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மடிப்பாக்கம் பகுதியில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் ஏராளமான வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ராம்நகர் பகுதியில் கீழ்தளம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன. இதையடுத்து முதல் தளத்திற்கு மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

சாலைகளில் 4 அடி உயரத்திற்கு மழை நீர் சூழ்ந்துள்ளது. சதாசிவம் நகர் பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர்.

ஒருநாள் மழைக்கே சென்னையின் பல்வேறு பகுதிகளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தொடர்மழை பெய்தால் சென்னை நகரம் என்னவாகும் என்று பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

Heavy rain hits Madipakkam area in Chennai.

அடுத்த செய்தி