ஆப்நகரம்

சென்னையில் சட்டென்று மாறிய வானிலை...மகிழ்ச்சியில் மாநகரவாசிகள்!

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் மாநகரவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 22 Oct 2020, 4:44 pm
பருவமழை காலம் என்பதால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் சில வாரங்களாகவே பகல், இரவு வேளைகளில் அவ்வபோது மழை பெய்து வருகிறது.
Samayam Tamil சென்னை வானிலை
சென்னை மாநகரில் இன்று பரவலாக மழை


சென்னை மாநகரில் இன்று காலை வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், மாலை 4 மணியளவில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கார்மேகங்கள் சூழ, வானிலை சட்டென்று மாறியது.

எழும்பூர், பெரம்பூர்,கொளத்தூர். திருவொற்றியூர்,காசிமேடு, ,இராயபுரம், துறைமுகம், பாரிமுனை.மெரினா,ராயப்பேட்டை, மைலாப்பூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அயனாவரம், அண்ணாசாலை, புதுப்பேட்டை, சைதாப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டித் தீர்த்தது.

வடகிழக்கு வரவில்லை, ஆனாலும் மழை பிளக்கும் முக்கியச் செய்தி!

இதன் காரணமாக அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

அடுத்த சில மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி