ஆப்நகரம்

சென்னையில் செம மழை- மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை முதல் பெய்து வரும் மழையால், வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Samayam Tamil 23 Jul 2019, 7:49 pm
சென்னையின் பல பகுதிகளில் இன்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
Samayam Tamil சென்னையில் செம மழை- மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்!
சென்னையில் செம மழை- மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்!


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று சென்னையில் அண்ணாநகர், ஈக்காட்டுதாங்கல், திநகர், கொளத்தூர், விருகம்பாக்கம், அம்பத்தூர், ராயபுரம், வண்ணாரபேட்டை, காசிமேடு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதேபோல் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி பகுதிகளில் பெய்துவரும் மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் சேத்துப்பட்டு, கிண்டி, எழும்பூர், திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி