ஆப்நகரம்

சென்னையில் திடீர் கனமழை: பொது மக்கள் மகிழ்ச்சி

தலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Samayam Tamil 28 Jul 2020, 4:11 pm
தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதால், கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil சென்னை மழை
சென்னை மழை


புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், கரூர், மதுரை, தேனி, திருச்சி, விருதுநகரில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. உள்மாவட்டங்கள், காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலும் பெரும்பாலான இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையின் கிண்டி, சைதாப்பேட்டை, வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதேபோல், புறநகர் பகுதிகளான தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

லாக்டவுன்... வீ்ட்டு வாசலுக்கே வரும் மீன், இறால்... வறுமையில் பறக்கும் கொரோனா பயம்!!

மேலும், பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு குளிச்சியான சூழல் நிலவுகிறது. மழை காரணமாக வெப்பம் தனிந்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி