ஆப்நகரம்

சென்னையில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் : ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்!

சென்னையில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் : ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்!

TOI Contributor 25 Mar 2017, 9:19 pm
சென்னையில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுல்லதால் ஒரு குடம் தண்ணீரை பொதுமக்கள் 10 ரூபாய் கொடுத்து வாங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil heavy water crisis is chennai
சென்னையில் தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் : ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்!


தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. சென்னைக்கு தண்ணீர் வழங்கும் சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் புழல் ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் குடிநீரை மக்கள் விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி லாரிகளில் வழங்கிவந்த தண்ணீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதமான இப்போதே இப்படி இருக்கும் நிலையில், கோடைக்காலமான மே மாதங்களில் நிலமையை எப்படி சமாளிக்க போகிறோம் என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி