சென்னை எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர் நாள் விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் கல்லூரியின் ஆண்டு மலரை அமைச்சர் பொன்முடி வெளியிட மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பெற்றுக்கொண்டார். விழாவின் முடிவில் கல்லூரி மாணவிகளுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் க.பொன்முடி, சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.
விழாவில் அமைச்சர் அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது:
பெண்கள் கோயில்களுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. ஆண், பெண் சமமாக இருக்க வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை. நீதி கட்சியை துவக்குவதற்கான கூட்டம் எத்திராஜ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
பெண்கள் கல்வி வளர்ச்சிக்காக திருமண உதவி திட்டத்தை அறிவித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். தற்போது கலைஞரின் வழியில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பேருந்துகளில் இலவச பயணம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர்.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டத்தை கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவரின் வழியில் தற்பொது முதலமைச்சர் பெண்களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறார்.
போதையில் ‘ஆயில் மசாஜ்’; அப்றம்...இது வேற நடக்குதா?
தியாராஜ பாகவதரின் குடும்பத்திற்கு உதவி செய்து வருபவர் முதலமைச்சர். கல்லூரிகளில் ஆசிரியர்கள் வகுப்பெடுக்கும்போது புத்தகத்தில் உள்ள பாடங்களோடு சேர்ந்து சமூக நீதி, பெண்களின் உரிமை போன்றவைகளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
இதன் பிறகு, அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறும்போது, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கூறினார்.
விழாவில் அமைச்சர் அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது:
பெண்கள் கோயில்களுக்கு செல்ல முடியாத நிலை இருந்தது. ஆண், பெண் சமமாக இருக்க வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் கொள்கை. நீதி கட்சியை துவக்குவதற்கான கூட்டம் எத்திராஜ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.
பெண்கள் கல்வி வளர்ச்சிக்காக திருமண உதவி திட்டத்தை அறிவித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். தற்போது கலைஞரின் வழியில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பேருந்துகளில் இலவச பயணம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர்.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டத்தை கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவரின் வழியில் தற்பொது முதலமைச்சர் பெண்களின் நலனுக்காக செயல்பட்டு வருகிறார்.
போதையில் ‘ஆயில் மசாஜ்’; அப்றம்...இது வேற நடக்குதா?
தியாராஜ பாகவதரின் குடும்பத்திற்கு உதவி செய்து வருபவர் முதலமைச்சர். கல்லூரிகளில் ஆசிரியர்கள் வகுப்பெடுக்கும்போது புத்தகத்தில் உள்ள பாடங்களோடு சேர்ந்து சமூக நீதி, பெண்களின் உரிமை போன்றவைகளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.
இதன் பிறகு, அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறும்போது, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கூறினார்.