சென்னை வியாசர்பாடி நாரயணசாமி தெருவில் வசித்து வருபவர் முகுந்தன்(49). இவரது மனைவி லட்சுமி(40). இந்து முன்னணி அமைப்பில் மத்திய சென்னை மாவட்ட துணைத்தலைவராக முகுந்தன் பதவி வகிப்பதாக கூறப்படுகிறது.
இவரது அடுத்த குடியிருப்பில் வசித்து வருபவர் கோபிநாத்(31). இவர் கார்பன்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காஞ்சனா(29). இவர்கள் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த இரண்டு வருடங்களாக வாய்த் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முகுந்தனுக்கும், கோபிநாத்துக்கும் இடையே வாய்த் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் முகுந்தன் கோபிநாத்தை தாக்கியதால், அவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
அப்போது கோபிநாத்தின் மனைவி காஞ்சனாவை முகுந்தன், அவரது மனைவி லட்சுமி, அவரது உறவினர் காசிமேட்டை சேர்ந்த பவானி(46) ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இதில் காயமுற்ற காஞ்சனா ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகாரின் பெயரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இந்து முன்னணி நிர்வாகி முகுந்தன், லட்சுமி, பவானி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவரது அடுத்த குடியிருப்பில் வசித்து வருபவர் கோபிநாத்(31). இவர் கார்பன்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காஞ்சனா(29). இவர்கள் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த இரண்டு வருடங்களாக வாய்த் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முகுந்தனுக்கும், கோபிநாத்துக்கும் இடையே வாய்த் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் முகுந்தன் கோபிநாத்தை தாக்கியதால், அவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
அப்போது கோபிநாத்தின் மனைவி காஞ்சனாவை முகுந்தன், அவரது மனைவி லட்சுமி, அவரது உறவினர் காசிமேட்டை சேர்ந்த பவானி(46) ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இதில் காயமுற்ற காஞ்சனா ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகாரின் பெயரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இந்து முன்னணி நிர்வாகி முகுந்தன், லட்சுமி, பவானி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.