ஆப்நகரம்

தமிழக அரசின் பாராட்டு சான்றிதழ் பெற்ற ஹிப் ஹாப் தமிழா ஆதி!

தமிழக அரசின் பாராட்டு சான்றிதழ் பெற்ற ஹிப் ஹாப் தமிழா ஆதி!

TOI Contributor 28 Jan 2017, 6:03 pm
மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக கூடிய மாணவர்கள் அறவழியில் 7 நாட்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தமிழ் திரையுலகை சேர்ந்த லாரன்ஸ், ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஆர்ஜே பாலாஜி ஆகியோர் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றிய பிறகு அதுவே நிரந்தர சட்டம் என்று ஆர்ஜே பாலாஜி மற்றும் ஹிப் ஹாப் தமிழா ஆதி பின்வாங்கினர். ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒரு படி மேலே போய் ஃபேஸ் புக்கில் தனது வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், சமூக விரோதிகள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துள்ளனர். அதனால் நான் போராட்டத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று அறிவித்தார். இந்த பின்வாங்கலை மாணவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஏனென்றால் விலகுவதை மட்டும் தெரிவிக்காமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விலகுவதாக அறிவித்தார். தற்போதும் மாணவர்கள் ஹிப் ஹாப் தமிழா ஆதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Samayam Tamil hip hop thamizha aadhi received certificate from tn goverment
தமிழக அரசின் பாராட்டு சான்றிதழ் பெற்ற ஹிப் ஹாப் தமிழா ஆதி!


இந்நிலையில் தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக போராடியவர் என்று ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு சான்றிதழ் கொடுத்து கௌரவித்துள்ளது. தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஜல்லிக்கட்டு போராட்டக்காரர் என்று பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார். இது மாணவர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவர்களின் ஒட்டு மொத்த போராட்டத்திற்கு எப்படி ஒருவர் மட்டும் சொந்தக்காரர் ஆக முடியும் என்று சமூக வலைதளத்தில் வசைபாடி வருகின்றனர்.

அடுத்த செய்தி