ஆப்நகரம்

சென்னை: தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு ரூ.58 லட்சம் அபராதம்!!

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், நோயாளி ஒருவர் தவறான சிகிச்சை முறையினால் உயிரிழந்தது உறுதியானதால், அவரின் குடும்பத்திற்கு ரூ.58 லட்சம் நிவாரணம் வழங்கும்படி மாநில நுகர்வோர் சிக்கல் தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 15 Sep 2018, 4:27 pm
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், நோயாளி ஒருவர் தவறான சிகிச்சை முறையினால் உயிரிழந்தது உறுதியானதால், அவரின் குடும்பத்திற்கு ரூ.58 லட்சம் நிவாரணம் வழங்கும்படி மாநில நுகர்வோர் சிக்கல் தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு ரூ.58 லட்சம் அபராதம்!!
தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனைக்கு ரூ.58 லட்சம் அபராதம்!!


கடந்த 2003 ஆம் ஆண்டு, அபானி குமார் பதி என்பவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், பைல்ஸ் நோய்க்காக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து, ஜெனரல் வார்ட்டில் அனுமதிக்கப்பட்ட அவரை, சுய நினைவு இழந்துவிட்டதாக கூறி, மருத்துவமனை நிர்வாகம் ஐசியுவிற்கு மாற்றியது. 15 நாட்களுக்கும் மேல், ஐசியுவில் இருந்த அவரை,குடும்ப உறுப்பினர்கள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 2003, நவம்பர் 2 ஆம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அவரின் குடும்பத்திற்கு தெரிவித்தது. மேலும், இன்சூரன்ஸ் பணம் போக, மீதமுள்ள பணத்தை கட்டவேண்டும் என வலியுறுத்தியது. இதனால், மனமுடைந்து போன, அபானி பதியின் பெற்றோர் நரசிங் பத்தி மற்றும் குரி பதி, மாநில நுகர்வோர் சிக்கல் தீர்ப்பு ஆணையத்தில் புகார் அளித்தனர்.

அவர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில் விசாராணை மேற்கொண்ட ஆணையம், அபானி பதிக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை, ஜெனரல் வார்ட்டில் இருந்த அவருக்கு தவறான முறையில் மயக்க மருந்து கொடுத்ததைக் கண்டுப்பிடித்தது.

இதனால், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு சுமார் ரூ.58 லட்சம் நிவாரணம் வழங்கும்படி, தவறான முறையில் சிகிச்சை அளித்த மருத்துமனை நிர்வாகத்திற்கு அந்த ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

அடுத்த செய்தி