ஆப்நகரம்

Chennai Rain: ஓரே நாள்ல இவ்வளவு மழையா..! தாங்குமா சிட்டி?

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று (நவம்பர் 16) மட்டும் 41 சென்டிமீ்ட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இது பருவமழை காலத்தில் பொழியும் சராசரி மழையை விட 4 சென்டிமீட்டர் அதிகமாகும்.

Samayam Tamil 17 Nov 2020, 1:20 pm
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கடந்த 48 மணி நேரத்துக்கும் மேலாக விட்டு விட்டு பெய்து வருகிறது.
Samayam Tamil சென்னை மழை நிலவரம்
சென்னை -நேற்றைய மழை நிலவரம்


தலைநகர் சென்னையில் நேற்று முன்தினம் மாலையில் (நவம்பர் 15) இன்று அதிகாலை (நவம்பர் 17) வரை இடைவெளிவிட்ட தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிந்து, வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநகரில் எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு மழை பெய்துள்ளது என்ற விவரத்தை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.

வேகமாய் நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி... இந்த ஏரியா மக்களுகெல்லாம் வெள்ள அபாயம்!

அதன்படி, மாநகரில் அதிகபட்சமாக மயிலாப்பூர் டிஜிபி அலுவலக பகுதியில் 6.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக எம்ஜிஆர் நகரில் 2.2 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

இதேபோன்று, அயனாவரம் (3.7), எழும்பூர் (3.9), கிண்டி (2.6), பெரம்பூர் (4.4), புரசைவாக்கம் (3.8), தண்டையார்பேட்டை (3.9), ஆலந்தூர் (2.4), அம்பத்தூர் (3.8), சோழிங்கநல்லூர் (4.3) என மாநகரின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 41.4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ஒரு நாள் மழைக்கே அடையாறு ஆற்றில் வெள்ளம்... இன்னும் என்னென்ன ஆகப்போகுதோ?!

இந்த அளவு, பருவமழை காலத்தில் பொழியும் மழை அளவைவிட 4 சென்டிமீட்டர் அதிகம் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி