ஆப்நகரம்

அடையாறுக்கு கீழ் இவ்ளோ விஷயம் இருக்கா? CMRL கொடுக்கப் போகும் செம த்ரில்..!

அடையாறு ஆறு மற்றும் சேத்துபட்டு ஏரிக்கு அடியில் மெட்ரோ ரயில் இயக்கும் திட்டத்தில் மண் பரிசோதனைகள் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 16 Aug 2022, 9:54 am
தலைநகர் சென்னையில் Phase -1 திட்டத்தின் கீழ் நீல வழித்தடம் (விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம்), பச்சை வழித்தடம் (சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை) என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக Phase -2 திட்டத்தில் ஊதா வழித்தடம் (மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட்), காவி வழித்தடம் (கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை), சிவப்பு வழித்தடம் (மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர்) என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு முதல்கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
Samayam Tamil how will chennai metro rail limited construct underwater railway lines in adyar river and chetpet lake
அடையாறுக்கு கீழ் இவ்ளோ விஷயம் இருக்கா? CMRL கொடுக்கப் போகும் செம த்ரில்..!


நீருக்கு கீழ் சுரங்க மெட்ரோ

மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கான Phase-2 மெட்ரோ திட்டப் பணிகள் 2026ஆம் ஆண்டு நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஊதா வழித்தடத்தில் (Corridor-3) கெல்லீஸ் முதல் தரமணி வரை சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமையப் போகிறது. இது அடையாறு ஆறு மற்றும் சேத்துபட்டு ஏரி ஆகியவற்றின் வழியே செல்கிறது. குறிப்பாக KMC மற்றும் சேத்துப்பட்டு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே நீருக்கு அடியில் சுமார் 30 மீட்டர் ஆழத்தில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மண் பரிசோதனை

இதேபோல் க்ரீன்வேஸ் ரோடு மற்றும் அடையாறு ஜங்ஷன் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையில் அடையாறு ஆற்றின் கீழ் இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் நீருக்கு அடியில் மெட்ரோ என்ற த்ரில் அனுபவத்தை CMRL அறிமுகம் செய்யப் போகிறது. இதற்கான ஒப்பந்தம் L & T நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் நீருக்கு அடியில் மண் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அடையாறு ஆற்றின் கீழ் நடக்கும் மண் பரிசோதனை ஒரு மாதத்தில் நிறைவு செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.


அம்பத்தூர் எஸ்டேட்: நைட் டைமில் காத்திருக்கும் பெரிய ஆபத்து!

மூன்று கட்டப் பணிகள்

இதையடுத்து சேத்துப்பட்டு ஏரியின் கீழ் மண் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஒவ்வொரு 100 மீட்டர் ஆழத்திற்கும் மண் மாதிரிகள் சேகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நீருக்கு அடியில் சுரங்க மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் வழிமுறைகள் குறித்து முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் CMRL மற்றும் ஒப்பந்ததாரர்கள் தனித்தனியே மண் பரிசோதனை செய்வர். இதற்காக துளையிடும் இயந்திரத்துடன் pontoon இணைத்து செலுத்தப்படும். இது மண்ணை எடுத்து வர உதவிகரமாக இருக்கும்.

வலுவான அடித்தளம்

அதன்பிறகு புவியியலாளர் மண்ணை பரிசோதித்து என்ன வகை, அதன் நெகிழ்வு தன்மை குறித்து ஆராய்வார். மண் பரிசோதனை முடிவுகள் ஒப்பீடு செய்யப்பட்டு தகுதியான இடம் தானா? என்பது உறுதி செய்யப்படும். இதையடுத்து கூழ் இயந்திரம் ஒன்று குழம்பு போன்ற கலவையுடன் உள்ளே செலுத்தப்படும். இது போர்ஹோல் போடுவதற்கு உதவிகரமாக இருக்கும். இரண்டாவதாக சுரங்க போரிங் இயந்திரங்களின் கட்டர்கள், மண்ணிற்குள் இறக்கப்பட்டு அடிப்பகுதியை கெட்டியாய் பிடித்துக் கொள்ள செய்யப்படும்.

கான்கிரீட் செக்மெண்ட்ஸ்

அதன் வழியே சிமெண்ட் மற்றும் கெமிக்கல் கலந்த கலவை அடிப்பகுதியை நோக்கி தெளிக்கப்படும். இது மண்ணுடன் கெட்டியாய் பிடித்துக் கொள்ளும். இதன் தொடர்ச்சியாக கான்கிரீட் செக்மெண்ட்ஸ் போடப்படும். மொத்தம் ஆறு செக்மெண்ட்ஸ் சேர்ந்தது ஒரு ரிங். ஏராளமான ரிங்குகள் சேர்ந்து தான் ஒரு சுரங்கப் பாதை அமைக்கப்படும். மூன்றாவதாக கான்கிரீட் ஸ்லாப்கள், சிறப்பு சுரங்கப் பாதை ரிங்குகள் கட்டமைக்கப்படும்.


சென்னைக்கு அடுத்த சர்ப்ரைஸ்... ரூ.45 கோடியில் GCC போட்ட மாஸ்டர் பிளான்!

ரிங்குகளுக்குள் கட்டுமானம்

அதன்பிறகு கூடுதலாக கூழ் போன்ற கலவை செலுத்தப்படும். இது அடிப்பகுதியை வலுவாக பிடித்துக் கொண்டு நீர் கசிவில் இருந்து தடுக்க உதவுகிறது. பின்னர் சுரங்கப் பாதை அமைக்கும் இயந்திரம் மற்றும் நீரின் அடிப்பகுதி ஆகியவற்றின் அழுத்தம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். எல்லாம் சரியாக இருக்கும்பட்சத்தில் அடுத்தடுத்து ரிங்குகள் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்படும். ரிங்குகள் அமைத்துவிட்டால் அதன்பிறகு கட்டுமானப் பணிகள் எளிதாகி விடும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி