ஆப்நகரம்

மனைவி இறந்த சிறிது நேரத்தில் கணவன் சாவு!

சென்னை முகப்பேர் பகுதியில் மனைவி இறந்த சிறிது நேரத்தில் கணவன் இறந்தார்.

Samayam Tamil 27 Apr 2021, 1:27 pm
சென்னை முகப்பேர் மேற்கு, 1வது பிளாக் காளமேகம் சாலை 4வது தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (75). இவரது மனைவி ராஜேஸ்வரி (68). தம்பதிக்கு சரவணன் (52), குமார் (46), ராமு (43) என்ற 3 மகன்கள் மற்றும் லலிதா (50), தேவி (43), புவனேஸ்வரி (40) என்ற 3 மகள்கள் உள்ளனர்.
Samayam Tamil ஒரே நேரத்தில் இறந்த மனைவி, கணவன்
ஒரே நேரத்தில் இறந்த மனைவி, கணவன்


ராஜேஸ்வரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சில தினங்களுக்கு முன்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார்.

நூல் விலை ‘கிடுகிடு...’ ஜவுளி தொழிலாளர்கள் ‘கடுகடு!’

ராஜேஸ்வரியின் இறுதிச்சடங்கு நேற்று காலை அவரது வீட்டில் நடைபெற்றது. இதில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பாடியில் உள்ள மயானத்தில் தகனம் செய்ய ராஜேஸ்வரியின் உடல் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

இந்நிலையில் மனைவிக்கு இறுதிச்சடங்குகளை நடத்தி விட்டு மூர்த்தி மயானத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மனைவியின் உடல் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மூர்த்தி உயிரிழந்தார்.

வாக்கு எண்ணுவதில் சிக்கல்; தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை!

இந்த தகவல் மயானத்துக்கு சென்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராஜேஸ்வரியின் உடலை மயானத்தில் வைத்துவிட்டு, அனைவரும் வீட்டுக்கு வந்து மூர்த்திக்கு இறுதிச்சடங்கு செய்தனர்.

இதன் பிறகு மூர்த்தி-ராஜேஸ்வரி ஆகியோரது உடல்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

அடுத்த செய்தி