ஆப்நகரம்

கணவன் சந்தேகம்...பொறுக்க முடியாமல் மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு

தமது நடத்தையில் கணவன் சந்தேகம் கொண்டதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குரோம்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Nov 2020, 7:16 pm
சென்னை குரோம்பேட்டையை அடுத்த அர்க்கீஸ்வரர் தெருவை சேர்ந்த சரண்ராஜ் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
Samayam Tamil பெண் தற்கொலை
சென்னை குரோம்பேட்டையில் பெண் தூக்கிட்டு தற்கொலை


கௌசல்யா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவரது நடவடிக்கைகளில் சரண்ராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தால் சில மாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது .

வழக்கம் போல் நேற்று பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய கௌசல்யாவிடம், சரண்ராஜ் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த கௌசல்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விமானத்தில் வந்திறங்கிய வேற லெவல் போதை மாத்திரைகள், பார்சல் சைஸ் காரணமாக பிடிபட்டது...

பின்பு வீடு திரும்பிய சரண்ராஜ் வெகுநேரமாக கதவை திறக்காத்தால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்த கௌசல்யாவை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோசடி வழக்கில் சிக்கிய த்ரிஷாவின் முன்னாள் காதலர்..! சென்னையில் பரபரப்பு

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சரண்ராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான ஆறு வருடத்தில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி