ஆப்நகரம்

போராட்டத்தின் போது நான் மானபங்கப்படுத்தப்பட்டேன் - சென்னை பெண் போலீஸ்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வன்முறையின் போது நான் மானபங்கப்படுத்தப்பட்டேன் என பெண் போலீஸார் புகார் அளித்துள்ளார்.

TNN 28 Jan 2017, 1:20 pm
சென்னை : ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வன்முறையின் போது நான் மானபங்கப்படுத்தப்பட்டேன் என பெண் போலீஸார் புகார் அளித்துள்ளார்.
Samayam Tamil i was molested by protesters says chennai woman cop
போராட்டத்தின் போது நான் மானபங்கப்படுத்தப்பட்டேன் - சென்னை பெண் போலீஸ்


ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷனில் பணி புரிந்து வரும் தலைமை காவலர் துர்கா தேவி என்ற பெண் காவலர், போராட்டத்தில் வன்முறை வெடித்த போது என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தை சேர்ந்த தன்னுடன் வேலைப் பார்க்கும் 5 போலீஸாருடன் சேர்ந்து சென்று இந்த புகார் அளித்துள்ளார். புகாரில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதிநாளான ஜனவரி 23ம் தேதி வன்முறை வெடித்தது.

அப்போது சிலர் எங்கள் காவல் நிலையத்தை நோக்கி வந்தனர். அவர்களை தடுக்க போலீஸார் பேரிகேட் அமைத்து தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது அங்கு வந்தவர்கள் பேரிகேட்டை தகர்த்து உள்ளே வந்தனர். அப்போது கல் என் மீது தோள்பட்டையில் காயமடைந்ததால் நான் உள்ளே சென்றேன். அப்போது அங்கு வந்த சிலர் என்னை தகாத முறையில் தொட்டனர் என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி