ஆப்நகரம்

இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் ஐஐடி மாநாடு

சென்னை ஐஐடி மாணவர்கள் தொழிலதிபர்கள் பிரிவு நடத்தும் 4வது எடிஷன் ஆன்லைன் மாநாடு மார்ச் 8 முதல் மார்ச் 10 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

Samayam Tamil 6 Mar 2019, 4:45 am
சென்னை ஐஐடி மாணவர்கள் தொழிலதிபர்கள் பிரிவு நடத்தும் 4வது எடிஷன் ஆன்லைன் மாநாடு மார்ச் 8 முதல் மார்ச் 10 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
Samayam Tamil iit chennai


முதலாம் ஆண்டில் ஐந்துகோடிவரை முதலீடு செய்யப்பட்டது. இதற்கு நெட் ஆஃப் எக்செலரேட்டர் ஸ்பான்சர் செய்தது. மாணவர்கள் நடத்தும் தொழிலதிபர்கள் மாநாட்டில் இந்த ஆன்லைன் மாநாடு புதிதாக தொழில் தொடங்குவோர், முதலீட்டாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரை இணைக்கிறது. தொழில் துவங்க விரும்புபவர்களை ஊக்கிவிக்கிறது. இம்முறை இந்த மாநாட்டில் பொருட்களை மார்கெட்டிங் செய்வது குறித்து தொழில் முனைவோருக்கு விளக்கப்படுகிறது.

ஐஐடி-யின் ஈ செல் பிரிவு இந்தியா முழுவதும் உள்ள 5000 பள்ளி மாணவர்களுக்கு இதுகுறித்து விளக்கம் அளித்தது. தேர்வு செய்யப்பட்ட 4 மாணவர் குழு இம்மாநாட்டில் தங்கள் செயல்பாட்டை இங்கு பகிர்கின்றனர். ஐஐடி முன்னாள் மாணவி லதா வெங்கடாசலம் முன்னாள் மாணவர் அமைப்புத் தலைவராக உள்ளார். அவர் கூறுகையில் இந்த மாநாடு பல இளம் தொழிலதிபர்கள் உருவாக உறுதுணையாக இருக்கும் என்றார்.

அடுத்த செய்தி