ஆப்நகரம்

'பார்' யாருடையதா இருந்தா என்ன? -'தில்' காட்டிய அடையாறு போலீஸ்!

அதிமுக பிரமுகரின் பெயரை பயன்படுத்தி டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த நபரை போலீசார் அதிரடியா கைது செய்தனர்.

Samayam Tamil 21 Nov 2020, 10:30 am
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் ஐ-பை என்ற பெயரில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இந்த பார் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக்கின் தம்பி ரவி என்பவருக்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது.
Samayam Tamil டாஸ்மாக் பார்
டாஸ்மாக் பார் - சென்னை வேளச்சேரி


இதனை சொல்லியே காவல் துறையை சரிகட்டி 24 மணி நேரமும் சட்டவிரோத மது விற்பனை மற்றும் அதிக விலைக்கு பாரில் பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.

அதிமுகவில் மாவட்ட செயலாளர் பொறுப்பில் அசோக் உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேளச்சேரி போலீசாரும் தயங்கி வந்தனர். இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு பொதுமக்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து தொடர் புகார் அளித்து வந்தனர்.

ஒரு கோடி ரூபாய் சீட்டு பணம் அபேஸ்... தம்பதியை சுற்றிவளைத்த போலீஸ்!

இதனையடுத்து, அடையார் துணை ஆணையர் விக்ரமன் தலைமையிலான தனிப்படை போலீசார் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட வேளச்சேரியை சேர்ந்த முத்து(28) என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து சுமார் 180 மி.லி.அளவு கொண்ட 154 மதுபாட்டில்கள் மற்றும் 22 பீர்பாட்டில்கள் என 176 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட முத்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

அடுத்த செய்தி