ஆப்நகரம்

பைக் மீது மோதி பலியான 16 வயது மகனால் அம்மாவுக்கு வழக்கு!

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் பள்ளித்தோழியுடன் பைக்கில் சென்ற 16 வயது மாணவன் விபத்தில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Apr 2018, 3:35 pm
சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் பள்ளித்தோழியுடன் பைக்கில் சென்ற 16 வயது மாணவன் விபத்தில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil chennai


சென்னை அம்பத்தூர் பகுதியை அடுத்துள்ள அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரோஹித். இவர் அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர், தன்னுடைய பள்ளித் தோழியுடன் அம்பத்தூர் எஸ்டேட் பகுதிக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது, அந்த சாலையை கடக்கும் போது திருமங்கலைச் சேர்ந்த பாபு என்பவர் மீது ரோஹித்தின் பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ரோஹித், அவரது தோழி மற்றும் பாபு ஆகிய மூன்று பேரும் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பாபு பலியாகியுள்ளார். இதில், காயமடைந்த ரோஹித், அவரது தோழி ஆகியோரை போலீசார் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில், சிகிச்சை பலனின்றி ரோஹித் உயிரிழந்துள்ளார். இது குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கடந்த மாதம் 22ம் தேதி சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

18 வயதுக்குட்பட்டோர் பைக் ஓட்டினால் அந்த வாகனத்தின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்களது பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, முதல் வழக்காக ரோஹித்தின் அம்மா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்