ஆப்நகரம்

பெண்ணை தரதர என இழுத்து சென்று செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது!

சென்னையில் பெண்ணை தரதர என இழுத்துச் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

SamayamTamil 20 Feb 2018, 10:57 pm
சென்னையில் பெண்ணை தரதர என இழுத்துச் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞன் போலீசாரால் கைது ​ செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil in chennai pattinapakkam chain snatching case accused arunkumar arrested
பெண்ணை தரதர என இழுத்து சென்று செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது!


கடந்த 11ம் தேதி, சென்னை அரும்பாக்கத்தில் பைக்கில் வந்த ஒருவர் மேனகா என்ற பெண் அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயற்சித்தனர். அப்போது, சங்கிலியை பிடித்து இழுக்கும் போது மேனகா கீழே விழுந்துள்ளார். அப்போதும், விடாமல் சங்கிலியை பிடித்தபடி தர தர வென மேகலாவை இழுத்துச் சென்ற காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.



இந்த நிலையில், இந்த சங்கிலிப் பறிப்பு வழக்கில் பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த அருண் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்ய முயற்சித்த போது தவறி விழுந்ததால், அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு அருண்குமார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே அருண்குமார் மீது 11 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி