ஆப்நகரம்

சென்னை: மாடியிலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு!

சென்னை, ராயப்பேட்டையில் தவறுதலாக மாடியிலிருந்து தவறி, பக்கத்து வீட்டின் மேற்கூரையில் விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Samayam Tamil 28 Sep 2018, 5:55 pm
சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், வீட்டின் மாடியிலிருந்து தவறுதலாக பக்கத்து வீட்டு மேற்கூரையில் விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.
Samayam Tamil 65987525


ராயபேட்டையில் உள்ள சைவ முத்தையா தெருவில் வசிப்பவர் தினேஷ் குமார்(30). பெயின்டராக வேலை பார்த்து வரும் இவர், நேற்றிரவு, தனதுசகோதரருடன் சேர்ந்து வீட்டு மொட்டை மாடியில் வைத்து மது அருந்தியுள்ளார். இரவு 11. 30 மணிக்கு, தினேஷ் குமாரின் சகோதரர் தான் தூங்குவதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். சிறிது நேரம் மாடியில் இருந்துவிட்டுதான் வருவதாக, தினேஷ் கூறியிருக்கிறார்.

அதன் பிறகு தினேஷ் புகைப்பிடித்துவிட்டு, மாடியின் திண்டில் உட்கார்ந்தபோது தவறுதலாக பக்கத்துவீட்டு மேற்கூரையில் விழுந்துள்ளார். அந்த மேற்கூறை உடைந்து, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 25 வயதான ஜெயந்தி மற்றும் அவரது மகன், மேல் தினேஷ் விழுந்துள்ளார்.

கீழே விழுந்த தினேஷ்குமார் கழுத்தில் கம்பி குத்தியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஜெயந்தி கையிலும், அவரது மகனுக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டது. அவர்கள் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்