ஆப்நகரம்

சென்னை விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து!

சென்னை விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

Samayam Tamil 21 Sep 2018, 11:11 am
சென்னை விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில், 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
Samayam Tamil சென்னை விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து!
சென்னை விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தில் திடீர் தீ விபத்து!


கொல்கத்தாவில் இருந்து வந்த உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும், சொகுசு பேருந்தின் மூலம், நடை மேடைக்கு வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பேருந்தின் பின்பகுதியில் தீப்பற்றியது. இதனால் பதற்றமடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக பேருந்தில் இருந்து வெளியேறி ஓடினர்.

பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து விருகம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 25-க்கும் மேற்பட்ட வீரர்கள் 4 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சபரி நகர், சுபஸ்ரீ நகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சிறிது நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்