ஆப்நகரம்

மெரினாவில் முதன்முறையாக பொதுமக்கள் படகு ஓட்டுதல் நிகழ்ச்சி!

சென்னை மெரினாவில் வரும் மார்ச் 3 மற்றும் 4 தினங்களில் மாலை 3மணி முதல் 5 மணி வரை பொதுமக்கள் படகு ஒட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு படகு ஒட்டும் சங்கம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 27 Feb 2018, 12:06 am
சென்னை மெரினாவில் வரும் மார்ச் 3 மற்றும் 4 தினங்களில் மாலை 3மணி முதல் 5 மணி வரை பொதுமக்கள் படகு ஒட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு படகு ஒட்டும் சங்கம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil interested in sailing head to marina beach in chennai on march 3 and 4
மெரினாவில் முதன்முறையாக பொதுமக்கள் படகு ஓட்டுதல் நிகழ்ச்சி!


இது குறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் கூறுகையில், முதன் முறையாக மெரினாவில் பொதுமக்கள் படகு ஓட்டும் நிகழ்ச்சி நடக்கவுள்ளதாகவும், இதன் மூலம் படகு ஓட்டுதலில் உள்ள சுவாரசியம், படகு ஓட்டிகளின் வாழ்க்கை முறை உள்ளிட்ட பலவற்றை பொதுமக்கள் புரிந்து கொள்ள விழிப்புணர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு படகு ஓட்டும் அனுபவத்தை பெறலாம் என்றும் அன்றைய தினம் பிரத்யகமாக ஸ்டால்கள் அமைக்கப்பட்டு, இரண்டு விதமான படகுகள் குறித்த பயிற்சிகள் விளக்கப்படும் என்றும் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த பொது மக்களுக்கான படகு ஓட்டுதல் நிகழ்ச்சியில், ஆசிய விளையாட்டு வீரர் ஐஸ்வர்யா செழியன், மற்றும் சித்ரேஷ் தாட்டா உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி