ஆப்நகரம்

சென்னை கிண்டியிலும் மும்பையைப் போன்ற கோர விபத்து காத்திருக்கிறதா?

கடந்த சில வாரங்களுக்கு முன் மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

TNN 13 Oct 2017, 5:46 pm
கடந்த சில வாரங்களுக்கு முன் மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
Samayam Tamil is chennai going to see another elphinstone stampede in guindy railway station
சென்னை கிண்டியிலும் மும்பையைப் போன்ற கோர விபத்து காத்திருக்கிறதா?


இந்தச் சம்பவத்தையடுத்து, அரசின் மீது பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர். மேலும், இந்தச் சம்பத்தைப் பற்றி ஏற்கனவே பலமுறை தெரிவித்தும் அரசு நடவடிக்கை தவறியதே இந்த விபத்திற்கு காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நமது சென்னை மாநகரத்திலுள்ள கிண்டி இரயில் நிலையத்திலும் நடக்க வாய்ப்புள்ளது. மிகவும் கூட்டநெரிசல் உள்ள இடமாக கருதப்படும் கிண்டி ரயில் நிலையத்தில் எப்போதுமே கூட்டம் இருக்கும்.

அதிலும், காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்களின் கூட்டம் அலைமோதும். இந்த நேரங்களில் இங்கு கூட்டநெரிசல் கட்டுப்படுத்த முடியாத அளவில் இருக்கிறது.

எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தைப் போன்றே இங்கேயும், பயணிகளுக்கான மேம்பாலம் கூட்ட நெரிசல் நிறைந்ததாகவே காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அரசுதரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும், இதுவரையில் முறையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டது போல் தெரியவில்லை. மும்பையைப் போன்றே சென்னையிலும் அசம்பாவிதம் ஏதாவது நடப்பதற்கு முன்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Is Chennai going to see another elphinstone stampede in Guindy Railway Station?

அடுத்த செய்தி