ஆப்நகரம்

டிஜிபி சைலேந்திர பாபு செம டென்ஷன்; ரவுடிகளை சுட்டுப்பிடிக்க திடீர் உத்தரவு?

ரவுடிகள் அட்டகாசம் குறித்து டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு வந்த தகவல் ரொம்பவே டென்ஷன் ஆக்கி உள்ளது. எனவே, கட்டுப்படாதவர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுவதால், ரவுடிகள் கிலியில் உள்ளனர்.

Samayam Tamil 10 Mar 2022, 11:31 am
தமிழகத்தின் தலைநகராக உள்ள சென்னை மாநகரில் ரவுடிகள் அட்டகாசம் காலம் காலமாக இருந்தபடி உள்ளது. எனவே, ரவுடிகளை ஒழிக்க போலீஸ் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.
Samayam Tamil சைலேந்திர பாபு
சைலேந்திர பாபு



அந்தவகையில் ஏற்கனவே சென்னை மாநகரில் அட்டகாசம் செய்த ரவுடிகள் அயோத்திகுப்பம் வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர், காவல் துறையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர்.

சாதி வெறி பிடித்த அமைச்சர் தலை துண்டிக்கப்படும்; திமுக பிரமுகர் திடீர் மிரட்டல்!
அதன் பின்னர் ரவுடிகளை அதிகமாக சுட்டு பிடிக்காவிட்டாலும் கைது நடவடிக்கை, சிறை தண்டனை என காவல் துறையினர் ஒருபுறம் வேட்டையாடி வந்தாலும், மறுபுறம் ரவுடிகளின் சேட்டையானது சென்னையில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ரவுடிகள் ஒழியும் அதே சமயம் புற்றீசல் போல ரவுடிகள் புதிது புதிதாக உருவாவது போலீசுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. அந்தவகையில், சமீபகாலமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் புதிதாக ரவுடிகள் தலையெடுத்து வருகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமீபத்தில் நடந்து உள்ள கொலை சம்பவங்களில் இளம் வயதினர் பலர் ஈடுபட்டு கைதாகி இருப்பதே, இதற்கு சான்றாக அமைந்துள்ளது.

கோகுல்ராஜ் வழக்கு தீர்ப்பு; திருமா ரியாக்‌ஷன்...நீதித்துறை ஷாக்!
உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் மடிப்பாக்கம் பகுதியில் திமுக பிரமுகர் செல்வத்தை இளம் வயது இளைஞர்கள் சுற்றி வளைத்து, மிகவும் துணிச்சலாக கொலை செய்திருக்கும் சம்பவம் காவல் துறையை கதிகலங்க செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகரில் உள்ள ரவுடிகள் பட்டியலை முழுமையாக சேகரித்து உடனே அறிக்கை அளிக்கும் படி, தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி சென்னையில் 1000க்கு மேற்பட்ட ரவுடிகள் பட்டியல் எடுத்து இருக்கும் போலீசார் அவர்களுடைய முழு விவரங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பேரு சொகுசு.. ஆனால் டம்மி பஸ்; பயணிகளிடம் கெஞ்சிய டிரைவர்!
அதேப் போல், தலைமறைவாக உள்ள ரவுடிகள் எத்தனை பேர்? என்பது தொடர்பான தகவல்களை புள்ளி விவரங்களுடன் தயாராக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம், இதுபோன்ற நபர்களின் நடவடிக்கையை முளையில் கிள்ளி எறியும் வகையில் அதிரடியான நடவடிக்கைகளை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், தேவைப்பட்டால் எல்லை மீறுகிற ரவுடிகளை என்கவுன்டரில் சுட்டுத்தள்ளவும், திடீர் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், ரவுடிகள் கிலியில் உள்ளனர்.

அடுத்த செய்தி