ஆப்நகரம்

மின்சார ரயில் சேவை குறைப்பு; அறிவிப்பு இரவு வெளியாகிறதா?

சென்னையில் மின்சார ரயில் சேவை குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 9 May 2021, 5:42 pm
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Samayam Tamil மின்சார ரயில்
மின்சார ரயில்


இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு நாளை முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக மின்சார ரயில் சேவை வெகுவாக குறைக்கப்படும் என தகவல் பரவியது.

இதனால் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் வெகுவாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மயங்கி விழுந்ததில் தந்தை சாவு; அப்புறம் மகன் ஏன் கைதானார்?

இந்நிலையில் 200 மின்சார ரயில் சேவை வரை குறைக்கப்பட்டாலும், காலை மற்றும் மாலை நேரத்தில் அதிகளவில் மின்சார ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரயில் சேவை குறைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவே வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி