ஆப்நகரம்

சென்னை மெட்ரோ : தி.நகரில் வேகமெடுக்கும் மெட்ரோ பணிகள்!

சென்னை தியாகராயநகரில் வரும் அக்டோபர் மாதத்தில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 3 Apr 2023, 1:00 pm
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மீண்டும் இரண்டாவது கட்டமாக மூன்று வழித்தடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன.
Samayam Tamil chennai metro rail


மூன்று வழித்தடங்கள்

மாதவரத்தில் இருந்து சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3ஆவது வழித்தடமும், கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4ஆவது வழித்தடமும், மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5ஆவது வழித்தடமும் அமைக்கப்பட்டு வருகிறது. 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் 128 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மெரீனா டூ கோடம்பாக்கம்

4ஆவது வழித்தடமான மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் 2 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிலும் சுமார் 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு இரட்டை சுரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 16 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை முழுவதையும் தோண்டுவதற்கு 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்: ஓபிஎஸ் தரப்புக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படுமா?
தி.நகர் வரும் இயந்திரம்!

700 மெட்ரிக் டன் எடை கொண்ட இயந்திரம் துளை போட பயன்படுத்தப்பட உள்ளது. இது தற்போது சில பகுதிகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் தி.நகர், பனகல் பார்க் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அதற்கு முன்பாக, இயந்திரத்தை செயல்படுத்துவதற்கான கட்டுமான பணிகள் தி.நகர் பனகல் பார்க் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.
அண்ணாமலை தனி ரூட்: மோடியை வைத்து பக்கா பிளான் ரெடி!
பனகல் பார்க் டூ போட் கிளப்!

வரும் அக்டோபர் மாதத்தில் தி.நகரில் இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியில் ஈடுபடுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இயந்திரம் பூமிக்கு அடியில் 29 மீட்டர் ஆழத்தில் கீழ்நிலையில் தொடங்கப்பட்டு, பனகல் பார்க் நிலையத்திலிருந்து நந்தனம் வழியாக சுரங்கம் தோண்டிக் கொண்டு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் போட் கிளப்பை சென்றடையும் என்று கூறப்படுகிறது.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி