ஆப்நகரம்

மீண்டும் பருவமழை தொடக்கமா? சென்னை மழை குறித்து வெதர்மேன் கூறும் மகிழ்ச்சி செய்தி!

சென்னை: திடீர் மழை பருவமழை தொடங்குவதற்கு அறிகுறியாக இருக்கலாம் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Oct 2018, 6:32 pm
ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யும். இது தமிழகத்தில் அதிக மழைப் பொழிவை அளிக்கக் கூடியது. இந்நிலையில் கடந்த மாத இறுதியில் பெய்த மழை, வடகிழக்குப் பருவமழையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Samayam Tamil Chennai Rains


ஆனால் அரபிக் கடலில் உருவான புயல், ஓமன் பக்கம் சென்றுவிட்டது. இதனால் அக்டோபர் 2வது வாரத்தில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த சூழலில் சென்னையில் இன்று ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன், இது பருவமழை தொடக்கமாக இருக்கலாம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சில இடங்களில் மழை பெய்யாமலும், சில இடங்களில் கனமழையும் பெய்யும். மேகக்கூட்டங்கள் போகும் திசையை கணிக்க முடியவில்லை.

வடசென்னை நின்று போன மழை, மெல்ல நகர்ந்து மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் பெய்யும். ஆனால் கொஞ்ச நேரத்தில் நின்றுவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

It will be typical pre monsoon in Chennai says Tamilnadu WeatherMan.

அடுத்த செய்தி