ஆப்நகரம்

மாப்பிள்ளை பிடிக்காததால் சென்னையில் ஐடி பெண் ஊழியர் தற்கொலை..!!

வீட்டில் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் ஐடி பெண் ஊழியர் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 Jul 2018, 11:19 am
வீட்டில் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் ஐடி பெண் ஊழியர் அலுவலக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil newsfirst 6_1441183644
மாப்பிள்ளை பிடிக்காததால் ஐடி பெண் ஊழியர் தற்கொலை..!!


சென்னை துரைபாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் பிரியங்கா (27). ஆந்திராவை சேர்ந்த இவர் வழக்கம் போல அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார்.

பணி நேரம் முடிந்த பிறகு அலுவலக கட்டிடத்தின் 9வது மாடிக்கு சென்ற பிரியங்கா கீழே குதித்தார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் பிரியங்கா உயிரிழந்தார்.

அவரது உடலை மீட்ட காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரியங்காவின் மரணம் தொடர்பாக போலீசார் சக ஊழியர்களிடம் விசாரித்தனர்.

அதில் ஆந்திராவின் உள்ள பிரியங்காவின் பெற்றோர்கள் கடந்த வாரம், அவரது திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்ததாக தகவல் கிடைத்துள்ளது.

பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் அலுவலக மாடிக்கு சென்று கீழே குதித்து பிரியங்கா தற்கொலைச் செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்