ஆப்நகரம்

கருணாநிதி பல்லாண்டு வாழ வேண்டும்- தமிழில் அறிக்கை வெளியிட்ட நடிகர் பவன் கல்யாண்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பூரண நலம் பெற்று விரைவில் அவர் வீடு திரும்ப இறைவனை பிராதிப்பதாக ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் தமிழில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 4 Aug 2018, 8:03 pm
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பூரண நலம் பெற்று விரைவில் அவர் வீடு திரும்ப இறைவனை பிராதிப்பதாக ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் தமிழில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil pawan-kalyan-karunanidhi-health
கருணாநிதி பல்லாண்டு வாழ வேண்டும்- தமிழில் அறிக்கை வெளியிட்ட நடிகர் பவன் கல்யாண்


கடந்த 8 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நலம் குறித்து பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இன்று ஆந்திராவின் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தி கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண், கருணாநிதி பூரண நலம் பெற்று இல்லம் திரும்ப வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கருணாநிதி தமிழின போர்வாள்- நடிகர் பவன் கல்யாண்


தமிழில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையில், தமிழுக்காக ஒப்பற்ற சேவை செய்த ஒப்பற்ற தலைவர் என திமுக தலைவர் கருணாநிதிக்கு பவன் கல்யாண் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒரு சிறந்த ஆசாணாகவும், எழுத்தாளனகவும் விளங்கி வரும் கருணாநிதிக்கு நானும், இந்த இந்திய நாடும் மிகுந்த கடமைப்பட்டுள்ளோம். சென்னையில் வசித்த போது இதை கண் கூடாக பார்த்துள்ளேன்.

தமிழினத்திற்கு வீரப்போராக இருந்த தலைவர் இன்னும் பல நூறாண்டுகள் வாழ்ந்தால், அவரது அரசியல் மற்றும் இலக்கிய அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் நல்ல வழிகாட்டியாக அமையும்.

ஜனசேனா உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சார்பாக, இருகரம் கூப்பி எல்லாம் வல்ல இறைவனை கலைஞர் அவர்களை கூடிய விரைவில் நலம் பெறச்செய்திட கேட்டுக்கொள்கிறேன்.

என தமிழில் எழுதி வெளியிடப்படுள்ளன அறிக்கையில் பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி