ஆப்நகரம்

சென்னையில் வெறிச்சோடிய சாலைகள்: கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்

கொரோனா பரவலை தடுக்க சுய ஊரடங்குக்கு வலியுறுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையின் பரபரப்பான சாலைகளில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.

Samayam Tamil 22 Mar 2020, 3:32 pm
சென்னை: தலைநகர் சென்னையின் வெற்றிச்சோடிய பரபரப்பான சாலைகளில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக கிரிக்கெட் விளையாடி புதுய அனுபவத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
Samayam Tamil கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்
கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள்


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், பிரதமர் மோடியின் வலியுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பெரிய கடைகள் மூடப்பட்டுள்ளன.

பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க பொது மக்களும் தங்களது வீடினுள்ளேயே இருந்து வருகின்றனர். இதனால், நாடு முழுவதும் பாலைவனமாக காட்சியளிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை அரசு உத்தரவின்படி, அரசு, தனியார் பேருந்துகள், ரேஷன் கடைகள், மெட்ரோ ரயில்கள், டாஸ்மாக் கடைகள், சிறிய மற்றும் பெரிய கடைகள், கேன் குடிநீர் கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவைகள் செயல்படவில்லை.

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு- பொதுமக்கள் உஷாராக இருங்க!

அத்தியாவசிய தேவைகளான மருத்துவமனைகள், மருந்து கடைகள், அம்மா உணவகங்கள், ஆம்புலன்ஸ் சேவை, பெட்ரோல் பங்குகள், ஆவின் பால் விநியோகம் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகிறது. கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் பத்திரிகையாளர்கள் செய்திகளை வழங்கி வருகின்றனர். தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.

தமிழக எல்லைகள் மூடப்பட்டுள்ளன அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தவிர வேறு வாகனங்கள் அனுமதிக்கப்படாது எனவும், அனுமதிக்கப்படும் வாகனங்களில் வரும் நபர்களும் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மக்கள் ஊரடங்கை நாளை காலை 5 மணி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை சாலைகளில் போக்குவரத்தின்றி வெறிச்சோடி பாலைவனம் போல் காட்டியளிக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சென்னையின் பிராதன சாலைகளை மைதனாமாக்கிய இளைஞர்கள், கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா; எண்ணிக்கை 7ஆக உயர்வு

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் வீட்டுனுள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், வெறிச்சோடிய பிரதான சாலைகளில் கிரிக்கெட் விளையாடுவது புதிய அனுபவத்தை கொடுப்பதாக இளைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி