ஆப்நகரம்

அரசுடைமை ஆகிறதா ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்...?

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டை அரசுடைமையாக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

TNN 16 Feb 2017, 1:20 pm
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டை அரசுடைமையாக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
Samayam Tamil jayalalith kodanadu estate will become under government control
அரசுடைமை ஆகிறதா ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்...?


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என அதிரடியாக அறிவித்தது. இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியான ஜெயலலிதா இறந்து விட்டதால் வழக்கிலிருந்து விடுவித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்கு சென்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் பெரும்பாலான சொத்துக்கள் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளதால் அவற்றை பறிமுதல் செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், நீலகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட் அரசுடைமையாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோத்தகிரியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கொடநாடு எஸ்டேட் கடந்த 1992ம் ஆண்டு 17 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இதன் இயக்குனர்களாக சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் உள்ளனர். இந்த கொடநாடு எஸ்டேட்டில் 10 சதவீதம் மட்டுமே ஜெயலலிதாவுக்கு பங்கு உள்ளது. இந்த பகுதி ஜெயலலிதா வசம் ஆனவுடன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டன.

கொடநாடு எஸ்டேட் அரசுடைமையானால், மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு தேயிலை தோட்ட கழகத்துடன் அதனை இணைக்க வேண்டும் என்றும், அங்கு பணிபுரியும் சுமார் 500 தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில், அரசு தேயில் தோட்டப் பணியில் பணி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

அடுத்த செய்தி