ஆப்நகரம்

சென்னை ஏரிகளில் இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே நீர் இருப்பு !

சென்னையில் உள்ள ஏரிகளில் இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளதால், சென்னைவாசிகள் கவலையடைந்துள்ளனர்.

Samayam Tamil 6 Nov 2018, 5:48 pm
சென்னையில் உள்ள ஏரிகளில் இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளதால், சென்னைவாசிகள் கவலையடைந்துள்ளனர்.
Samayam Tamil Pulicat-Lake-in-Chennai-Manvendra-Bhangui-flickr


சென்னையின் முக்கிய நீராதாரங்களானசெம்பரபாக்கம், பூண்டி , சோழவரம், புழல் ஏரிகளின் நீர் இருப்பு குறைவாக உள்ளது. சோழவரம் ஏரியில் 2 சதவிகித நீரும், செம்பரபாக்கம் ஏரியில் 6 சதவிகிதம் நீரும் இருப்பதான் உள்ளது.

நவம்பர் 3 ஆம் தேதி நிலவரப்படி 4 ஏரிகளை சேர்த்து மொத்தம் 1,758 கன அடி நீர் இருப்பு உள்ளது. அதுவே சென்ற வருடம் இந்நேரம்2,114 கன அடி நீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே இந்த ஏரிகளில் தண்ணீர் இருக்கும் நிலை ஏற்படுள்ளது. இதனால் இந்த வருடம் வடகிழக்கு பருவமழை வருகின்ற நாட்களில் தவறாமல் பெய்தால் மட்டுமே சென்னையில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படாமல் தடுக்க நிலை ஏற்பட்டுள்ளதாக, சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய குடிநீர் வாரிய அதிகாரி கூறுகையில் ‘ இன்னும் 15 நாட்களுக்கு மட்டும் இருப்பதால், சென்னைக்கு அருகாமையில் இருக்கும் 22 குவாரிகளில் இருந்துதண்ணீர்கொண்டுவரப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்