ஆப்நகரம்

கொரோனா வராம இருக்கணுமா? -அப்போ இங்க போங்க... மறக்காம இத கேட்டு குடிங்க!

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, அம்மா உணவகங்களில் இலவச கபசுர குடிநீர் வினியோகம் மறுபடியும் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 16 Apr 2021, 9:40 am

ஹைலைட்ஸ்:

  • சென்னையில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
  • நோய் எதிர்ப்பு சக்திக்காக அம்மா உணவகத்தில் கபசுர குடிநீர் விநியோகம் மீண்டும் தொடக்கம்.
  • உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இது இலவசமாக வழங்கப்படுகிறது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அம்மா உணவகம் -சென்னை
சென்னை அம்மா உணவகத்தில் கபசுர குடிநீர் இலவச விநியோகம்
சென்னை மாநதரில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தது வருவதையடுத்து அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா சிகிச்சை மையங்களிலும், நோயாளிகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க, சுகாதார துறையுடன் இணைந்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இவற்றில் முக்கியமாக நேற்று முதல், மாநகரில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் கபசுர குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

பதவியேற்க நாள் குறிச்சாச்சு: ஸ்டாலினுக்கு வீடு தேடும் குடும்பத்தினர்?

அத்துடன் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவோருக்கும், அவர்களது வீட்டை சுற்றி இருப்போருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்காக கபசுர குடிநீர் பொடியை மாநகராட்சி சுகாதார துறை அலுவலர்கள் வழங்கி வருகின்றனர்.

மேலும் மண்டலவாரியாக தினந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த செய்தி