ஆப்நகரம்

Kamal Haasan: ”திருநாவுக்கரசர் கூறியது செய்தி; நான் சொன்னால் தான் சிக்னல்”- பலே காட்டிய கமல்ஹாசன்

காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தான் சிக்னல் கொடுத்ததாக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறிய தகவலுக்கு கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Aug 2018, 4:47 pm
காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தான் சிக்னல் கொடுத்ததாக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறிய தகவலுக்கு கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil makkal-kamal
கூட்டணி குறித்து நான் கூறினால் தான் ’சிக்னல்’- கமல்ஹாசன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்ற கமல் அறிவித்ததை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலிலும் பலமான கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அரசியல் களம் காங்கிரஸிற்கு அதரவாக உள்ளது. பாமக, விடுதலை சிறுத்தைகள், தினகரன் அணியினர் காங்கிரஸ் தலைமையில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.

டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசிய கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடனான கூட்டணியில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவிக்கும் வகையில் சிக்னல் காட்டியுள்ளதாக திருநாவுக்கரசர் கூறினார்.

தொடர்ந்து டெல்லி செல்ல சென்னை விமான நிலையம் வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணி பற்றி திருநாவுக்கரசர் கூறியது செய்தி தான். நான் சொன்னால் தான் அது சிக்னல் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய கமல்ஹாசன், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்திட வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மக்கள் நீதி மய்யம் கட்சி என்றுமே துணையாக இருக்கும் என கூறினார்.

அடுத்த செய்தி