ஆப்நகரம்

சென்னை சிறுமி வழக்கில் நீதி விரைந்து கிடைக்க வேண்டும்: கமல் வலியுறுத்தல்

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழர்களுக்கு தலைகுனிவு என்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 18 Jul 2018, 5:43 pm
சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழர்களுக்கு தலைகுனிவு என்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil kamal-haasan-21
சென்னை சிறுமி வழக்கில் நீதி விரைந்து கிடைக்க வேண்டும்: கமல் வலியுறுத்தல்


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இதுவரை வருமான வரிசோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணம் எங்கே என்று கேள்வி எழுப்பினார்.

வருமான வரி சோதனை கண்துடைப்போ என்ற சந்தேகிக்கும் சூழ்நிலை வந்துவிட்டதாக கருத்து தெரிவித்த அவர், சென்னை மாற்றுத்திறனாளி சிறுமியை செய்த 17 பேருக்கு மன்னிப்பு காட்டக்கூடாத என்று கமல்ஹாசன் கூறினார்.

இந்த வழக்கை பொறுத்தவரை நீதி விரைந்து செயல்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு மனிதாபினம் காட்ட தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி